பேசினால் காசு சொர்கத்தின் திறவுகோல் - நா
அரசன் ஒருவனுக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி
போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் அரசரின் அரண்மனையில் கூடி இருந்தனர்.
அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக இளம் எல் ஐ சி ஏஜென்ட் ஒருத்தர் நின்டிருந்தார்
அரசர் அவரைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார். இளம் ஏஜென்ட் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். அரசன் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
ஏஜென்ட் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினார்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
அரசன் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அரசன் 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
ஏஜென்ட் " அரசே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறி ஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
அரசன் "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
ஏஜென்ட் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டார்.
அரசன் " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக ஏஜென்ட் வந்தார். அவர் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
அரசன் " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்/
ஏஜென்ட் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாக்கு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னார்.
ஏஜென்டின் அறிவைக் கண்டு வியர்ந்த அரசன் தன் மகளை ஏஜென்ட்க்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
நாக்கு ஒரு அற்புத பொருள்.
சொர்கத்தின் திறவுகோலும் அது தான்.
நரகத்தின் வாசல்படியும் அது தான்.
முகவர் தோழர்களே நமது தொழிலுக்கு நாவன்மை உயர்வை தரும். அந்த நாவன்மை இந்த மார்ச் மாதத்தில் சற்று கூடுதலாக இருந்தால் வானளாவிய வணிகம் நம் வசமே
பேசினால் காசு
காப்பீட்டு உன்னதத்தை எல்லோரிடத்திலும் பேசுவோம்
வெற்றி அணைவருக்குமே
எல்ஐசிஏஓஐ வாழ்க...
முகவர்களை பாதுகாப்போம்
எல்ஐசியை காப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக