பேசினால் காசு சொர்கத்தின் திறவுகோல் - நா

அரசன் ஒருவனுக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார். மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் அரசரின் அரண்மனையில் கூடி இருந்தனர். அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர். ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் கடைசியாக இளம் எல் ஐ சி ஏஜென்ட் ஒருத்தர் நின்டிருந்தார் அரசர் அவரைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார். இளம் ஏஜென்ட் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். அரசன் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். ஏஜென்ட் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினார். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. அரசன் அதை பார்...